August 21, 2008

காரைக்குடி வழிவிடும் விநாயகர் துணை என் "இந்த" முயற்சிக்கு

நேத்து ராத்திரி எப்பவும் போல, என்னைய மீறி யோசிக்க ஆரம்பிச்சேன்; ஒன்னும் தோணலை. சரின்னு நல்லா தூங்கிட்டேன். 2 மணி வாக்குல மோட்டார் ஓடுற சத்தம் கேட்டு முழிச்சுட்டேன்.. என்னடா இதுன்னு சுதாரிச்சுப்பார்த்தா பக்கத்துல ஒரு பயபுள்ள ம்ம்ம்ம்...க்க்க்க்....ர்ர்ர்ர்... ம்ம்ம்ம்...க்கக்...ர்ர்ர்ர் ன்னு மூக்கு ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணி கோரமங்களா ஏரியாவையே சுத்திவந்துட்டுஇருக்கு. என்னடா இவனுங்க தூங்குறதுக்கு முன்னாடி பேசியே கொல்றானுங்க, சரி ஒரு வழியா தூங்கலாம்னா கொரட்டைவிட்டு மிரட்டுரானுங்க ன்னு புரண்டு படுத்தேன் அப்ப தோணுச்சு ஒரு ஹைக்கூ....; வேணாம், ஒரு கவிதை ன்னு சொல்வோம்; வேணாம், ஒரு இதுன்னு வச்சிக்குவோம்; (யார்ரா இவன் மேட்டெருக்கு வாடான்னு சொல்ரீங்க்ளா?? சரி இதோ கீழே ) ..

தூங்குமுன் அரட்டை தூங்கியபின் குறட்டை
எங்குசெல்ல என அறியாமல் அலைகிறது - என்
ஆறரைமணிநேர தூக்க அஞ்சலட்டை