தலைப்பு: வழுக்கைத் தலையைப் பற்றி மக்களின் கருத்து
விஜி: வழுக்கை உள்ளவர்கள் கவலைப்பட தேவை இல்லை. எல்லோருக்கும் இரண்டு கைகள் உள்ளன. இவர்களுக்கு மூன்றாவது கை ஆன "வழுக்கை" உள்ளது என்ற நம்பிக்கையோடு இருங்கள். வழுக்கை என்பது இயற்கை. அதை புரிந்துகொண்டு வாழ்வதுதான்வாழ்க்கைஎன்று அவர் பேசியது எதிர்கால வலுக்கையர்களான என்னை போன்ற மனிதர்களுக்கு (ஆண்களுக்கு) மிகவும் ஆறுதாலக இருந்தது.
மேலும் அவர் பேசியதன் சிறப்பம்சம் என்னவென்றால், தன் படமான "வெள்ளித்திரை"யில் வழுக்கை என்ற வார்த்தையை பிறரை புண்படுத்தும் விதமாக உபயோகப்படுதியதற்காக தன்னையும் மன்னிக்குமாறு கேட்டுகொண்டது கேள்விகளுக்கு இடமில்லாமல் பாராட்டுதலுக்குரியது.
என்ன சொல்கிறீர்கள் ?