August 21, 2008

காரைக்குடி வழிவிடும் விநாயகர் துணை என் "இந்த" முயற்சிக்கு

நேத்து ராத்திரி எப்பவும் போல, என்னைய மீறி யோசிக்க ஆரம்பிச்சேன்; ஒன்னும் தோணலை. சரின்னு நல்லா தூங்கிட்டேன். 2 மணி வாக்குல மோட்டார் ஓடுற சத்தம் கேட்டு முழிச்சுட்டேன்.. என்னடா இதுன்னு சுதாரிச்சுப்பார்த்தா பக்கத்துல ஒரு பயபுள்ள ம்ம்ம்ம்...க்க்க்க்....ர்ர்ர்ர்... ம்ம்ம்ம்...க்கக்...ர்ர்ர்ர் ன்னு மூக்கு ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணி கோரமங்களா ஏரியாவையே சுத்திவந்துட்டுஇருக்கு. என்னடா இவனுங்க தூங்குறதுக்கு முன்னாடி பேசியே கொல்றானுங்க, சரி ஒரு வழியா தூங்கலாம்னா கொரட்டைவிட்டு மிரட்டுரானுங்க ன்னு புரண்டு படுத்தேன் அப்ப தோணுச்சு ஒரு ஹைக்கூ....; வேணாம், ஒரு கவிதை ன்னு சொல்வோம்; வேணாம், ஒரு இதுன்னு வச்சிக்குவோம்; (யார்ரா இவன் மேட்டெருக்கு வாடான்னு சொல்ரீங்க்ளா?? சரி இதோ கீழே ) ..

தூங்குமுன் அரட்டை தூங்கியபின் குறட்டை
எங்குசெல்ல என அறியாமல் அலைகிறது - என்
ஆறரைமணிநேர தூக்க அஞ்சலட்டை

July 19, 2008

ஊசி போன வடை

ஊசி போன வடை

தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழுமுன் இறைவனை துதிக்காத பல நாட்களில் ஒரு நாள் தோன்றிய ஒரு .. ஒரு ... ஒரு .. பெயரிட தெரியவில்லை.. முயற்சி எடுக்கவும் விருப்பம் இல்லை . (ஹி ஹி ..)

நேற்று சுட்ட வடையில் இருந்து நூல் வருவது(இருப்பது) ஏன்?

ஏனென்றால், அது "ஊசி போன" வடை.

ஊசி போன வடை என்று நம்ப வேண்டும் என்றால் அதில் நூல் வருவதே முறை, தர்கரீதியாகவும் சரியெனப்படுகிறது. (logically correct.)

April 09, 2008

என்னை கவர்ந்தவை

சென்ற வாரம் விஜய் டிவி "நீயா நானா" வில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த "வெள்ளித்திரை" திரைப்பட இயக்குனர் விஜி அவர்கள் கலந்துகொண்டு பேசியது மிகவும் என்னை கவர்ந்தது (என்னை மட்டும் அல்ல அங்கு இருந்த கோபிநாத் மற்றும் நேயர்கள் அனைவரையும் கவரும் விதமாக பேசியது அதை பற்றி பதிவு செய்ய தூண்டுகோலாக அமைந்தது). அதன் வெளிப்பாடே இந்த தகவல்.

தலைப்பு: வழுக்கைத் தலையைப் பற்றி மக்களின் கருத்து

விஜி: வழுக்கை உள்ளவர்கள் கவலைப்பட தேவை இல்லை. எல்லோருக்கும் இரண்டு கைகள் உள்ளன. இவர்களுக்கு மூன்றாவது கை ஆன "வழுக்கை" உள்ளது என்ற நம்பிக்கையோடு இருங்கள். வழுக்கை என்பது இயற்கை. அதை புரிந்துகொண்டு வாழ்வதுதான்வாழ்க்கைஎன்று அவர் பேசியது எதிர்கால வலுக்கையர்களான என்னை போன்ற மனிதர்களுக்கு (ஆண்களுக்கு) மிகவும் ஆறுதாலக இருந்தது.

மேலும் அவர் பேசியதன் சிறப்பம்சம் என்னவென்றால், தன் படமான "வெள்ளித்திரை"யில் வழுக்கை என்ற வார்த்தையை பிறரை புண்படுத்தும் விதமாக உபயோகப்படுதியதற்காக தன்னையும் மன்னிக்குமாறு கேட்டுகொண்டது கேள்விகளுக்கு இடமில்லாமல் பாராட்டுதலுக்குரியது.

என்ன சொல்கிறீர்கள் ?




குறுஞ்செய்தி கவிதைகள்

புரியாத பிரியம்
பிரியும் போது புரியும்
- பெயரில்லை

தமிழில் ஒரு ரீபஸ்

"ஜீன்" கள்:-

உதாரணம்:- ஆடு, மாடு, கோழி, நாய், பன்னி ஆகியவை "ஜீன்" கள் ஆகும்

பதில்:
"வ" இல்லா (வாயில்லா) ஜீவன் - ஜீன்


முயல்+ஆமை

முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்
முயலாமை என்றும் வெல்லாது
- பெயரிலி